கடலூர்,ஜூலை 13-
வருகிற 20 ஆம் தேதியிலிருந்து ராமேஸ்வரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் கடலூரில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம்- சென்னை எழும்பூர் விரைவு ரயில் வருகிற 18 ஆம் தேதி முதல் கடலூர் துறைமுகம், சீர்காழியில் நின்று செல்லும். சென்னை எழும்பூர்- காரைக்கால் விரைவு ரெயில் கடலூர் துறைமுகம், சீர்காழியில் 18 ஆம் தேதி முதல் நின்று செல்லும்.
சென்னை எழும்பூர்- தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் 18 ஆம் தேதி முதல் சீர்காழியில் நின்று செல்லும். ராமேஸ்வரம்-திருப்பதி விரைவு ரயில் திருப்பாதிரிப்புலியூர், சீர்காழியில் 20 ஆம் தேதி முதல் நின்று செல்லும். கன்னியாகுமரி- புதுச்சேரி விரைவு ரயில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர், சீர்காழியில் 24 ஆம் தேதி முதல் நின்று செல்லும் என அதில் கூறப்பட்டுள்ளது.