56 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28 அன்று சென்னையில் மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோட்டை நோக்கி பேரணி நடைபெற உள்ளது. இதனையொட்டி வெள்ளியன்று (மார்ச் 17) கே.கே.நகரில் உள்ள தெற்கு சென்னை மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள மத்தியசென்னை மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள் முன்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது.