கொளத்தூர், நவ.12- கொளத்தூரில் பெய்த பலத்த மழையால் பெரும் பாலான இடங்களில் மழை நீர் தேங்கியது. வில்லிவாக்கம், லோகோ ரயில் நிலையம் அருகில் உள்ள ஜி.கே.எம். காலனி, கொளத்தூர் அஞ்சுகம் நகர், எஸ்.ஆர்.பி காலனி, பாபா நகர் பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஜி.கே.எம் காலனியில் மழை வெள்ளம் சூழ்ந்து அபாய கரமாக காட்சியளிக்கும் மின்சார பெட்டியை கண்டு அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மின்சார பெட்டிக்குள் மழை நீர் புகுந்து மின் கசிவு ஏற்பட்டு உயிர் பலி ஏற்படுவதற்கு முன்பாக மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.