வேலூர். பிப் 23 - கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விளை யாட்டிற்கு கொடுக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே வேண்டுகோள்விடுத்தார். வேலூர் மாவட்டம், காட்பாடி யிலுள்ள விஐடி பல்கலைக் கழகத்தில் சர்வதேச கலை, கலாச்சாரம் மற்றும் விளையாட்டு போட்டிகள் அடங்கிய ரிவேரா 23 துவக்க விழா விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவ நாதன், ஜி.வி.செல்வம் தலைமை யில் நடைபெற்றது. இந்திய அணியின் கிரிக்கெட் அஜிங்கியா ரஹானே கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது, மாரத்தான் போட்டியின் பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த மதுராவுக்கும், ஆண்கள் பிரிவு பாஸ்கருக்கும் பதக்கம் மற்றும் சான்றுகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், “மாணவர்கள் கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவம் போல், கலைக்கும், விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் எதிர்காலத்தை முறை யாக திட்டமிட்டு வாழ்வில் உயர வேண்டும் ” என்றார். இதில் விஐடி உதவி துணை தலைவர் காதம்பரி விஸ்வ நாதன், துணைவேந்தர் ராம்பாபு கோடாலி, இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்தும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.