சென்னை, ஜூலை 11-
இந்திய பார் கவுன்சில் ஆர்வி பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளி மற்றும் அதன் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பி.ஏ. எல்.எல்.பி. மற்றும் பி.பி.ஏ. எல்.எல்.பி. போன்ற கல்வி திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ஸ்கூல் ஆஃப் லா பட்டப்படிப்பு திட்டங்கள் அடுத்த மாதம் முதல் தொடங்கும். சட்டப் பள்ளியின் டீன் மற்றும் துணைவேந்தர், பேராசிரியர் ஓய்.எஸ்.ஆர் மூர்த்தி இது பற்றி கூறுகையில், ஆர்வி பல்கலை கழகத்தில் சட்டப் பள்ளியைத் தொடங்குவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி யடைகிறோம், சட்டப் பள்ளியின் மூலம், நீதி, ஒருமைப்பாடு மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றின் கொள்கைகளை நிலைநிறுத்தும் எதிர்கால வழக்கறிஞர்களை உருவாக்கு வதே எங்கள் நோக்கமாகும். எங்கள் மாணவர்கள் வணிகம், பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் பொதுக் கொள்கை ஆகியவற்றுடன் சட்டத்தை ஆழமாக கற்றுக்கொள்வதற்கான தனித்துவமான வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்.