கடலூர், மே.12- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் விருத்தாசலம் வட்டச் செயலாளராக ஆர்.கலைச்செல் வன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருத்தாசலம் சிபிஎம் வட்டக் குழு கூட்டம் கே.சின்னத்தம்பி தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கருப்பையன், மாவட்டக்குழு உறுப்பினர் கலைச்செல்வன் வட்டக் குழு உறுப்பினர்கள் குமரகுரு, இளங்கோவன், சுந்தரவடிவேல், கோவிந்தன், செல்வ குமார், அன்புச்செல்வி, நெல்சன், வீராச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருத்தாசலம் வட்டச் செயலாளராக ஆர்.கலைச் செல்வன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். தீர்மானங்கள் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் சாதிய ரீதியாக செயல்படும் ஆசிரி யர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வு கட்டணம் என்ற பெயரில் மாணவர் களிடத்தில் ஆயிரக்கணக்கில் கொள்ளைய டிக்கும் சில ஆசிரியர்களை கேள்வி கேட்ட தற்காக மாணவர் சங்கத் தலைவர்கள் மீது காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுத்து மிரட்டும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.