சென்னை, டிச. 30 - சாலைகளில் குப்பை, கட்டிட கழிவுகள் கொட்டப் பட்டால் அபராதம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மன்றக் குழுத் தலைவர் ஆர்.ஜெய ராமன் வலியுறுத்தினார். பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடை பெற்றது. இந்தக்கூட்டத்தில், நேரமில்லா நேரத்தில் ஆர்.ஜெயராமன் பேசியதாவது: மழைக்காலத்தில் அதிகம் பாதிக்கப்படும் வார்டாக 4 ஆவது வார்டு இருந்தது. முன்னெச்ச ரிக்கை நட வடிக்கை காரண மாக பருவ மழையின்போது ஒரே ஒரு இடத்தில்மட்டுமே வெள்ளம் நின்றது. இதற்காக மாநகராட்சி நிர்வாகத்தின் சிறப்பான பணிக்கு பாராட்டுக்கள். வெள்ளம் நின்ற இடம் மேற்குத்தெரு. ஆனால் பள்ளமான பகுதி. அந்த இடத்தில் ஒரு கிணறு அமைத்து மோட்டார் மூலம் வெள்ளத்தை அகற்ற மண்டல உதவி ஆணை யர் அறிவுறுத்தி இருப்பதை மண்டல அலுவலர் செயல்படுத்த வேண்டும். இந்த பகுதிக்கு அருகே 80ஏக்கர் பரப்பளவு கொண்ட இடிபிஎஸ் வளா கத்திலிருந்து தண்ணீர் குடியிருப்பு பகுதிக்கு வந்து விடுகிறது. இடிபிஎஸ் வளா கத்திலிருந்து வெள்ளம் பக்கிங்காம் கால்வாய் செல்ல வழியில்லை. எனவே, இடிபிஎஸ் வளா கத்தில் பாதியில் நிற்கும் சுற்றுச்சுவரை முழுமையாக கட்டி முடித்தால் வெள்ளம் வராது. அதற்கு நட வடிக்கை எடுக்க வேண்டும். குப்பை, கட்டிட கழிவு கள் கொட்டுவதற்கு அபரா தம் விதிக்க ஒரு வார்டில் 8 அதிகாரிகளிடம் அபராதம் வசூலிக்கும் கருவி கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஎம் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் சென்று மேயரிடம் மனு அளித்தோம். கனிவோடு பதிலளித்தார். 4 வார்டை ஒரு யூனிட்டாக மாற்றி, காரில் சென்று அபராதம் வசூலிக்கின்றனர். ஒரு நாளைக்கு ஒரு வார்டு வீதம் தேர்வு செய்து அபராதம் வசூலிக்கின்றனர். அதா வது 4 நாட்களுக்கு ஒரு முறை அபராதம் வசூ லிக்கப்படுகிறது. மாநக ராட்சி பல சிறப்பான பணிகளை செய்தாலும், இத்தகைய நடவடிக்கைகள் அரசுக்கு அவப்பெயர் உருவாகும். இந்த நடை முறையை கைவிட வேண்டும். காருடன் சென்று அபராதம் வசூ லிக்கும்போது மக்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. தெரு விளக்கு உதவி பொறி யாளரிடம் எதற்கு அபராதம் விதிக்கும் கருவி? இதை ஒழுங்குபடுத்த வேண்டும். மக்களை வதைக்கக் கூடாது. நிறுவனங்கள், தொழிற்சாலைகளை விட்டுவிட்டு மக்களிடம் இப்படி நடந்து கொள்ளலாமா? துணைமேயர் மு.மகேஷ் குமார் (குறுக்கீடு): இந்த கருத்து நியாயமானது. மறு பரிசீலனை செய்யப்படும். ஜெயராமன்: ரூ.290 கோடி செலவில் சாலைகள் சீரமைக்கப்பட உள்ளது. 4வது வார்டில் 70 சாலைகளை சீரமைக்க கோரியிருந்தேன். 25 தெருக்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப் படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. முதலா வது மண்டலத்தை விட குறைவான பரப்பளவு கொண்ட 2வது மண்ட லத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, 5 வருடங்களை கடந்த 70 சாலைகளையும் சீர மைக்க வேண்டும். அதற்கேற்ப நிதி ஒதுக்க வேண்டும். மீஞ்சூர் திட்டம் செயல்படவில்லை. இத னாள் ஒருநாள் விட்டு ஒரு நாள் 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது. அந்த நீரும் கலங்கலாக வருகிறது. இது தொடர்பாக குடிநீர்வாரிய மேலாண்மை இயக்குநரை சந்தித்து முறையிட்டும் இந்த நிலை மாறவில்லை. இதனை சரி செய்ய வேண்டும். பாதாள சாக்கடை இல்லாத பகுதிகளில் அவற்றை அமைக்க மாநகராட்சி பரிந்துரை செய்ய வேண்டும். வார்டில் மின்னழுத்த குறைபாடு தொடர்வதை சரி செய்ய வேண்டும். சுகாதார மையம் அமைக்கப்பட்டு ஓராண்டாகியும் திறக்கப் படாமல் உள்ளதை திறக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதிலளித்த மேயர் ஆர்.பிரியா, சாலை பணிகள் அடுத்த ஆண்டில் எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.