districts

img

அரக்கோணம் ரயில் நிலையத்தில் ‘கியூ ஆர் கோடு’ வசதி

அரக்கோணம், மார்ச் 20- அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். இதனால் டிக்கெட் எடுப்பதற்கு பயணிகள் பெரும் சிரமப்பட்டனர். இந்நிலையில், அங்கு ரயில் டிக்கெட் எடுக்கும் செயலி ‘கியூஆர் கோடு’ வசதி  ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம்  முன்பதிவு டிக்கெட் தவிர்த்து சாதாரண ரயில், விரைவு ரயில், அதிவிரைவு ரயில் நடைமேடை டிக்கெட் மற்றும் சீசன் டிக்கெட்  ஆகியவற்றை பெற முடியும். அரக்கோணம் ரயில் நிலையத்தி லிருந்து 50 மீட்டர் தூரம் வரை இந்த செயலியை பயன்படுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக ரயில் நிலைய வளாகத்திற்குள் 9 இடங்களில் கியூஆர் கோடு  ஒட்டப்பட்டுள்ளது. இதை பயண சீட்டு முதன்மை அலுவலர் காதர் ஷெரிப், ஸ்டேஷன் மாஸ்டர் சுபாஷ் குமார், ரயில்வே  பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் வின்சென்ட் ஆகியோர் துவக்கி வைத்தனர்.  கியூ ஆர் கோடு குறித்து சாரண சாரணி யர் இயக்க மாணவ- மாணவிகள் பயணிகளி டம் விளக்கிக் கூறினர்.