districts

img

ஒன்றிய அரசு மீது மக்கள் மன்றத்தில் மாற்றுத்திறனாளிகள் குற்றப்பத்திரிகை

சென்னை, டிச. 1- மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசுக்கு எதிராக வியாழனன்று (டிச.1) தமிழகம் முழு வதும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் சார்பில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதன் ஒருபகுதியாக வடசென்னை மாவட்டக்குழு சார்பில் எம்.கே.பி. நகரில் வியாழனன்று (டிச. 1) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்டத் தலைவர் ஆர்.ஜெயச்சந்திரன் அறிமுக உரையாற்றினார். நடுவராக மாநில பொதுச்செயலாளர் பா.ஜான்சி ராணி செயல் பட்டார். மாவட்டச் செயலாளர் எஸ்.ராணி, பொருளாளர் ஆர்.நடராஜன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலை வர் எம்.ராஜ்குமார், மாவட்டக் குழு உறுப்பி னர் பி.ஆர்.மகேந்திரன் ஆகியோர் ஒன்றிய அரசு குற்றவாளி என வழக்கு தொடுத்தனர். மாவட்டக் குழு உறுப்பினர் டி.சாரதி குழு வினர் வழக்கை மறுத்து பேசினர். இறுதி யில் மாற்றுத்திறனாளிகளை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது என நடுவர் தீர்ப்பு கூறினார். மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.செல்வ குமாரி நன்றி கூறினார். தென்சென்னை மாவட்டத் தலைவர் ஏ.கிருஷ்ணன் தலை மையில் சைதாப்பேட்டையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.வில்சன் கலந்து கொண்டார். வழக்கறிஞர் கே.சி.கார்ல் மார்க்ஸ் நடுவராக வைத்து மாவட்டச் செயலாளர் எம்.குமார், பொருளாளர் ஆர்.லாரன்ஸ் ஆரோக்கிய சகாயராஜ், துணைத்தலைவர்கள் எம்.சரஸ்வதி எம்.சி, என்.சாந்தி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.சித்ரகலா உள்ளிட்டோர் பேசினர்.