புதுச்சேரி, செப். 25- ஓய்வுபெற்ற விரிவுரையாளர்களை நிய மிக்கும் புதுச்சேரி கல்வித்துறை கண்டித்து வாலிபர்-மாணவர்கள் சங்கங்கள் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இம்மாதம் 8 ஆம் தேதி ஓய்வு பெற்ற விரிவுரையாளர்களை புதுச்சேரி கல்வித்துறை சார்பில் மீண்டும் 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக பணியமர்த்துவதற்கான சுற்றறிக்கை வெளி யிடப்பட்டது. புதுச்சேரி அரசின் இந்த அறிவிப்பு, படித்து முடித்து வேலைக்காக காத்தி ருக்கும் இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் வேலைக்கு காத்துக் கொண்டிருக்கும் நிலையில், வேலை கொடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அரசு, ஓய்வு பெற்ற விரிவுரையாளர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதற்கான நேர்முகத் தேர்வு இந்திரா காந்தி சதுக்கத்தில் உள்ள காமராஜர் கல்வித்துறை வளாகத்தில் திங்களன்று (செப்.25) நடைபெற்றது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜன நாயக வாலிபர் நிர்வாகிகள் ஆனந்த், ஜெய பிரகாஷ், கவுசிகன், பிரவீன், சஞ்சய், லீலாவதி, சிந்து, ஜெயராஜ், அபிஜித் உட்பட திரளான இளைஞர்கள் கல்வித் துறை வளாகத்தில் நடைபெற்ற நேர்முக அறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்ததும், நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்த 50க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற விரிவுரையாளர்கள் ஒட்டு மொத்தமாக வெளியேறினர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டம் நடத்திய வாலிபர்கள்-மாண வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், இதுகுறித்து வாலிபர் சங்க நிர்வாகிகள் கூறுகையில்,“ இனி மேலும் ஓய்வு பெற்றவர்களை அரசுப் பணியில் அமர்த்தினால் நேரடியாக களத்தில் இறங்கி போராடுவோம்” என்று எச்சரித்தனர்.