தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக எழுத்தாளர் பா. ஆசைத்தம்பி எழுதிய மூன்றாவது சிறுகதை தொகுப்பு தகிப்பு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜானகிராஜா தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் கேத்ரின் வரவேற்றார். கிளைத் தலைவர் கோமதி முன்னிலை வகித்தார். இலக்கியச்சோலை வளவ துரையன் சிறுகதை தொகுப்பு நூலை வெளியிட்டார். புதுவை மாநில உதவி செயலாளர் பச்சையம்மாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியை மாவட்டச் செயலாளர் கவிஞர் பால்கி ஒருங்கிணைத்தார். மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.