districts

img

கிளாம்பாக்கத்தில் பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்

செங்கல்பட்டு, ஜன.3- கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தி லிருந்து  வெளியேறும் பேருந்து களை சர்வீஸ் சாலையில் இயக்கு வதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவ தாக பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், வண்ட லூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை கடந்த டிச.30 அன்று தமிழ்நாடு முதல்வர் திறந்து வைத்தார். முதல் கட்டமாக தமிழ்நாடு அரசுவிரைவு போக்குவரத்து கழகத்தின் பேருந்து கள் முனையத்திலிருந்து மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, திருச்சி,  கோவை, ஈரோடு, சேலம், தஞ்சாவூர்  திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங் களிலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழக பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு கிளாம் பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ளே வந்து பயணிகளை ஏற்றி  செல்கின்றது. மேலும் இங்கிருந்து  சென்னையின் பல்வேறு பகுதி களுக்கு மாநகரப் பேருந்துகள் மூலமாக இணைப்பு பேருந்துகள்  இயக்கப்பட்டு வருகிறது. நாளொன் றுக்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் கிளாம் பாக்கம் பேருந்து நிலையத்தி லிருந்து சென்று வருகின்றன. இந்த நிலையில், கிளாம்பாக்கம்  பேருந்து முனையத்திலிருந்து வெளியேறும் பேருந்துகள் ஜிஎஸ்டி  சாலையின் சர்வீஸ் சாலையில் இயக்கப்பட்டு தேசிய நெடுஞ் சாலை வழியாக பல்வேறு ஊர் களுக்கு செல்கின்றன. பேருந்துகள் இயக்கப்படும் சர்வீஸ் சாலையில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு சென்று வர இந்த சர்வீஸ் சாலையை பயன்படுத்தி வந்தனர். இதனிடையே பேருந்துகள் சர்வீஸ் சாலையில் இயக்கப்பட்டு வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேருந்துகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தென் மாவட்டங்களில் இருந்து வந்த பொதுமக்கள் சென் னைக்கு செல்ல முடியாமல் பாதிக்கப் பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த  கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் போராட்டத் தில் ஈடுபட்ட  பொது மக்களிடம்  பேச்சு வார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து போராட்டத் தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.