ஓசூர், டிச. 25- கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பத்தல பள்ளி காய்கறி மார்க்கெட் பின்புறம் சாரல் நகர், செர்ரி ஹோம்ஸ், சுனில் நகர், சுவீட் ஹோம்ஸ், பாவை கார்டன், விஷ்ணு நகர் ஆகியவை உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் முறையான சாலை வசதி இல்லை. மேலும் மழைக்காலங்களில் சேறும், சகதியு மாக குண்டும், குழியுமாக சாலை கள் மாறிவிடுகின்றன. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மிக வும் சிரமப்படுகின்றனர். மேலும் ஆட்டோ, கார், போன்ற வாக னங்கள் இந்த பகுதிகளுக்குள் வர மறுக்கின்றன. அவசர காலங்க ளில் ஆம்புலன்ஸ் வண்டி வந்து, செல்லக் கூட முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதி காரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் அந்த பகுதி மக்களும், மாணவர்க ளும் ஓசூர் தாலுகா அலுவலகம் முன் திரண்டு தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் கவாஸ்கரிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தங்கள் பகுதிக்கு பிரதான சாலையில் இருந்து பாவை கார்டன் வரை உள்ள சாலையை அமைத்துத் தருமாறு கேட்டு மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.