districts

சென்னை முக்கிய செய்திகள்

பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

சென்னை, பிப். 5 - பெருங்குடி சதுப்பு நில குப்பை கிடங்கில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநகராட்சி பகுதிகளில் சேரும் குப்பைகளை கொண்டு வந்து பெருங்குடி சதுப்பு நிலத்தில் மாநக ராட்சி கொட்டி வந்தது. இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப் பட்டு, சதுப்பு நிலமும் பாழானது. நிலத்தடி நீர் நிறம்மாறி பயன்படுத்த முடியாமல் போனது. காற்றில் பல கி.மீ. தூரத்திற்கு துர்நாற்றம் வீசி வருகிறது. குப்பை கிடங்கின் பரப்பு அதி கரிக்க அதிகரிக்க மழை வெள்ளம் சதுப்பு நிலம் வழியாக வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கிறது. எனவே, குப்பை கிடங்கை அகற்ற வேண்டும், சதுப்பு நில ஆக்கிரமிப்புகளை அகற்ற  வேண்டும் என்று பலரும் கோரி வந்த னர். குப்பைக் கிடங்கை அகற்ற பசுமை தீப்பாயமும் உத்தரவிட்டது. இதையடுத்து குப்பை கிடங்கு பயோ மைனிங் முறையில் அகற்றப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் சுற்றுச் சூழல் பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக பொதுமக்களிடம் கருத்து கேட்புக்கூட்டம் திங்களன்று  (பிப்.5) பெருங்குடியில் நடை பெற்றது. மாநகராட்சி அறிவித்த படி,  பெருநகர சென்னை மாநகராட்சி  மேயர், மக்களவை உறுப்பினர், மாநகராட்சி ஆணையர் பங்கேற்க வில்லை. எஸ்.அரவிந்த்ரமேஷ் எம்எல்ஏ, 14ஆவது மண்டலக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு இயக்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், சென்னை யூத்  சென்டர்,

இன்ஜினியரிங் எலக்ட்ரா னிக்ஸ் அண்டு ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன், குடியிருப்போர் சங்கங் கள் உள்ளிட்டு ஏராளமான அமைப்பு கள், தன்னார்வலர்கள், தனிநபர்கள் கலந்து கொண்டனர். குப்பை அகற்றப்படும் இடத்தில்  பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்த னர். சதுப்பு நிலத்தை பாதுகாக்க, மீண்டும் உயிர்ப்பிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கருத்துக்களை தெரிவித்ததோடு, எழுத்துப்பூர்வமான ஆலோசனை களையும் வழங்கினர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம்  சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், “சதுப்பு நிலத்தை முழுமையாக பாது காக்க வேண்டும். சதுப்பு நிலத்தில் எத்தகைய கட்டுமான பணியையும் மேற்கொள்ளக் கூடாது. சதுப்புநில பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆக்கிரமிப்புகளை (குடி மக்களை பாதிக்காத வகையில்) முழுமையாக அகற்ற வேண்டும்.  குப்பை கிடங்கை ஒரு வருடத்திற் குள் அகற்ற, பயோ மைனிங் ஆலையை வேறு இடத்திற்கு மாற்ற  வேண்டும். சதுப்பு நிலத்தில் மருத்து வக் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும். காற்றின் தரத்தை மக்கள்  அறிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் திரையை நிறுவ வேண்டும். ‘ராம்சார்’ நிலத்திற்குரிய வரையரைகளை உறுதியாக பின்பற்ற வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது. சோழிங்கநல்லூர் தொகுதி குடியிருப்போர் நலச்சங்கங்களின் பேரமைப்பு சார்பில், “20 லட்சம் மக்கள் பாதிக்கும் வகையில் குப்பைக் கிடங்கு உள்ளது. குப்பை கிடங்கை அகற்றி மீண்டும் சதுப்பு நன்னீர் நிலமாக மாற்ற வேண்டும். சூழல் பூங்கா என்ற பெயரில் மீணடும் சதுப்பு நிலத்தை ஆக்கிரமிக்கக் கூடாது. காமாட்சி மருத்துவமனை - சென்னை ஒன்  மால் வரை மேம்பாலம் அமைத்து, கீழே உள்ள சாலையை தகர்க்க வேண்டும். காரப்பாக்கம் கிழக்கு, மேற்கு பகுதியில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றி, மழைக்காலத் தில் சதுப்பு நில நீர் தடையின்றி வெளி யேற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.

கட்டிட சங்க மதுரவாயல்  மேற்கு பகுதி பேரவை

சென்னை, பிப். 5 - சென்னை மற்றும் புறநகர் கட்டிட தொழிலாளர் சங்கத்தின் மதுரவாயல் மேற்கு பகுதி 15ஆவது ஆண்டு பேரவை ஞாயிறன்று (பிப். 4) முகப்பேரில் நடைபெற்றது. பகுதி தலைவர் எஸ்.அருணாச்சலம் தலைமையில் நடை பெற்ற இந்த பேரவையில், தென்சென்னை மாவட்ட செய லாளர் ஏ.நடராஜன், சம்மேளன மாநில குழு உறுப்பினர் சி.செங்கல்வராயன், பகுதிச் செயலாளர் பி.சுப்பிரமணி, பொருளாளர் என்.மதுரைவீரன், சிபிஎம் மதுரவாயல் பகுதிச்செயலாளர் வி.தாமஸ், மாதர் சங்கத் தலைவர்கள் எஸ்.சரவணசெல்வி, எஸ்.பிச்சையம்மாள், எஸ்.சித்ரா உள்ளிட்டோர் பேசினர். பகுதி தலைவராக எஸ்.அருணா சலம், செயலாளராக பி.சுப்பிரமணி, பொருளாளராக கே.நாமதேவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

சென்னையில் மலர் கண்காட்சி

சென்னை, பிப். 5- சென்னை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்குகிறது. சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்திருக்கும் செம்மொழி பூங்காவில் இந்த மலர்  கண்காட்சி 3ஆவது ஆண்டாக நடைபெற உள்ளது. இந்த மலர் கண்காட்சிக்காக கிருஷ்ணகிரி, கொடைக்கானல், குமரி,  மதுரையில் இருந்து மலர்கள் எடுத்துவரப்பட்டு கண்காட்சி யில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட மலர் கண்காட்சிக்குக் கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து இந்த ஆண்டும்  இந்த மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இந்த  மலர் கண்காட்சி நடைபெறும் செம்மொழி பூங்காவில் ஏற்கனவே அரிய வகை மரங்கள் வளர்க்கப்பட்டு பராமரிக் கப்படுவது குறிப்பிடத்தக்கது. இத்தகைய கண்காட்சியில் 10 லட்சம் மலர்கள் பயன்படுத்தப்பட உள்ளன. பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கும் மலர் கண்காட்சி சுமார் ஒருவாரம்  வரை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயர் தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள்

சென்னை, பிப். 5- தமிழ்நாட்டில் உள்ள நடுநிலைப் பள்ளிகளிலும் உயர்  தொழில்நுட்ப ஆய்வுக் கூடங்களை தொடங்கி, சென்னையில்  உள்ள உயர் தொழில்நுட்ப ஸ்டுடியோக்களுடன் இணைத்து,  ஆசிரியர்கள் நேரடியாக வகுப்பறையில் பாடம் நடத்தும் படக்காட்சிகளை மாணவர்களுக்கு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் கல்வி வளாகத்தில், கல்வித் தொலைக்காட்சிக்கான உயர்  தொழில்நுட்ப படப்பதிவு கூடங்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சி யாக அங்குள்ள ஸ்டுடியோவில் கேமரா ஒன்றை யும், ஜிம்மிஜிப் என்னும் தொழில் நுட்பக் கருவியையும் இயக்கி வைத்தார்.

பண மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை: ஆட்சியிடம் மனு

கடலூர், பிப். 5- கடலூர் மாவட்டம், சித்திரைப் பேட்டை, சாமியார் பேட்டை, புதுகுப்பம், தேவனாம்பட்டினம், ராமாபுரம், குமார பேட்டை, ராசா பேட்டை, அய்யம்பேட்டை போன்ற பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில், கடலூர் மாவட்டம் சித்திரைப் பேட்டை கிராமத்தை சேர்ந்த ரெஜினா, அவரது கணவர் குருநாதன் மற்றும் சங்கீதா ஜெலேந்திரன், சிந்து லாவண்யா ஆகியோர் கடலூர் முதுநகரில் 5 கிணற்று மாரியம்மன் கோவில் எதிரில் ஸ்ரீ சாய் கிரிப்டோ கன்சல்டன்சி என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 18 மாதங்களுக்கு ரூ 15,000 விதம் வழங்குவதாக ஆசை வார்த்தை கூறினர். இதை நம்பி சுமார் 100க்கும் மேற்பட்டோர் 6 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. ஒரு சிலருக்கு சில மாதங்கள் மட்டும் மாதம் ரூ.15 ஆயிரம் விதம் திருப்பி வழங்கிய நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் எந்த தொகையும் வழங்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது முறையான பதில் அளிக்கவில்லை. இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தாங்கள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பாலாற்றில் மேம்பாலத்துடன் புறவழிச்சாலை

வேலூர், பிப். 5 - வேலூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வேலூர் பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் மற்றும் புறவழிச்சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், வேலூர் சத்துவாச்சாரி மற்றும் காட்பாடி காங்கேய நல்லூரை இணைக்கும் வகையில் மூன்று கி.மீ. நீளத்திற்கு சாலை அமைக்கப்பட உள்ளது. இப்பணி துவக்கப்பட்டு வரும் 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும். இதற்காக ரூ.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் புறவழிச் சாலை 15 மீட்டர் அகலமும் 2.5 மீட்டர் சாலை தடுப்பும் அடங்கும். தற்போது கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனர்.