districts

மாணவர்களுக்கு பொதுத் தேர்வு: ஆட்சியர் ஆலோசனை

விழுப்புரம்,மார்ச் 4- விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12 வகுப்பு  அரசு பொதுத்தேர்வுக் கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில்,“ விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 47 தேர்வு மையங்களும், விழுப்பு ரம் கல்வி மாவட்டத்தில் 54 தேர்வு மையங்களும் அமைக்கப் பட்டுள்ளது. மொத்தம் 101 தேர்வு மையங்களில் 189 பள்ளிகளை சேர்ந்த 23,074 மாணவர்கள் தேர்வு எழு கிறார்கள். பத்தாம் வகுப்பு மாண வர்களுக்கா திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 56 தேர்வு மையங்களும் விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 65 தேர்வு மையங்களும் அமைக்கப் பட்டுள்ளது. 364 பள்ளிகளை சேர்ந்த 25,627 மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்” என்றார். இத்தேர்விற்கு 8 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், 5 விடைத்தாள் சேகரிப்பு மையங்களும், 28 மேல்நிலை விடைத்தாள் எடுத்துச் செல்லும் வழித்தடங்களும், 34 இடை நிலை மையங்களுக்கு விடைத்தாள் எடுத்துச் செல்லும் வழித்தடங்களும் ஏற்படுத்தப்பட் டுள்ளது எனவும் ஆட்சியர் தெரி வித்தார். தேர்வு நடைபெறும் நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல தேவை யான போக்குவரத்து வசதி களை ஏற்படுத்தவும், தேர்வு மையங்களில் சுகாதாரம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.