திருவள்ளூர், டிச 15- ஆரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள டவரை அகற்று கரையை பலப்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், பெருவாயல் எல்லைக்கு உட்பட்ட தனியார் கல்லூரி அருகில், ஆரணி ஆற்றங்கரையில் வெளிமாநிலங்களுக்கு மின்சாரம் எடுத்து செல்லும் பெரிய டவர் அமைத்துள்ளனர். இதனால் ஆற்றல் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது கரை முற்றிலும் சேதமடைந்து வெள்ளநீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது. எனவே டவரை அகற்றி கரையை பலப்படுத்த வேண்டும் என அப்மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.