சென்னை, ஏப். 24- ஆதார் குறைபாடுகளை சரி செய்ய வடசென்னையில் இ - சேவை மையங்களை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஆதார் அட்டையில் உள்ள குறைபாடுகளை சரி செய்வதற்கும், 15 வயதுக்கு மேலான குழந்தைகள் புதிதாக ஆதார் அட்டையை எடுக்கவும், பல்வேறு சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கவும் இ-சேவை மையங்களை அணுக வேண்டியுள்ளது. ஆனால் மிகக் குறைந்த எண்ணிக்கை யில் இ-சேவை மையங்கள் உள்ளன. மேலும் தினசரி 25 டோக்கன் மட்டுமே வழங்கப் படுகிறது. இதனால் மக்கள் தினசரி வந்து ஏமாற்றத்துடன் செல்லும் நிலை உள்ளது. இ - சேவை மையங்களில் பல்வேறு சான்றிதழ் வாங்க மக்கள் விண்ணப்பிக்க வருவதால் எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் போதுமான அளவு இ - சேவை மையங்கள் இல்லாததால் பொதுமக்கள் தினசரி அவதிப்படும் நிலை உள்ளது. இதுகுறித்து அம்பத்தூர் ஐசிஎப் காலனி பகுதியைச் சேர்ந்த எம்.எஸ்.அகமது என்பவர் கூறுகையில், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் இ - சேவை மையங்களில் மட்டும்தான் ஆதார் அட்டையில் மாறு தல்கள் செய்யப்படுகின்றன. ஆனால் அங்கு ஒரு நாளைக்கு 25 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது. இதனால் வய தானவர்கள், வேலைக்கு விடுப்பு எடுத்து வரு பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.எனவே வட்டம் வாரியாக இ - சேவை மையங்களை அமைக்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்கள் சிரமமின்றி ஆதார் அட்டை திருத்தம் உள்ளிட்ட பல வற்றை எளிதில், எளிமையாக பெறமுடியும் என்று கூறினார். பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசு, பொதுமக்களின் இந்த எளிய கோரிக் கையை நிச்சயம் நிறைவேற்றும் என்று நம்பு வோம்.