districts

img

விவசாய நிலங்களுக்கு பட்டா அரசு அதிகாரியிடம் பொதுமக்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி,பிப்.12- கிருஷ்ணகிரியில் உள்ள சோக்காடியில் தலித் மக்கள் அனைவருக்கும் பட்டா வழங்ககோரி மனு அளிக்கப்பட்டது. இங்குள்ள 150-க்கும் மேற்பட்ட தலித் மக்கள் பன்னெடுங்காலமாக வாழ்ந்து வரு கின்றனர். ஆதிக்கசாதியினரால் ஒடுக்கு முறைக்கு ஆளாகிவரும் இவர்களில் ஒரு பகுதி வீடுகளுக்கு பட்டாக்கள் இல்லை. இவர்களின் சிலரது குடும்பங்களின் பரம்பரை வானம் பார்த்த பூமியான அனுபவ விவசாய நிலங்களுக்கும்  இதுவரை பட்டாக்கள் கொடுக்கப்படவில்லை. பல தலைமுறைகளின் அனுபவ விவ சாய நிலங்களுக்கு பட்டாக்கள் கேட்டு அரசு அதிகாரியிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் புகார் அளித்தும் இதுவரை அரசு அதிகாரிகள் பட்டாக்கள் வழங்கிட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அன்பரசன் தலைமையில் 13 குடும்பத்தினர் தங்களின் 3 தலைமுறை கடந்த அனுபவ விவசாய நிலத்துக்கு பட்டாக்கள் கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட அலுவலர்கள் நேரில் வந்து ஆய்வு செய்கிறோம் என கூறி அனுப்பி வைத்துள்ளனர். தங்கள் விவ சாய நிலங்களுக்கு பட்டா கேட்டு மனு கொடுத்த சோக்காடி தலித் மக்கள் இதுவரை நடந்தது போலவே தற்போதும் அரசு அதிகாரிகள் காலம் தாழ்த்தாமல் பட்டா வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.