புதுச்சேரி, ஜூலை 21-
மணிப்பூர்வன் முறைக்கு காரணமான மணிப்பூர் மாநில பாஜக அரசை கலைக்க கோரி புதுச்சேரியில் மாதர், வாலி பர், மாணவர் இயக்கங்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டன.
மணிப்பூரில் பழங்குடி யின பெண்களை நிர்வாண மாக்கி அடித்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தில் அமைதி நிலவிட அனைத்து நடவடிக்கைகளையும் போர்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி காமராஜர் சிலை எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கங்களின் தலைவர்கள் முனியம்மாள், கௌசிகன், ஜெயபிரகாஷ் ஆகியோர் தலைமை தலைமை வகித்தனர்.
மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலை வர் சுதா சுந்தர்ராமன் கண்டன உரையாற்றினார். சங்கத் தலைவர்கள் இளவரசி, சத்யா, ஆனந்த், பிரவீன் குமார், லீலாவதி, பாஸ்கர், விண்ணரசன், நூருதீன், வந்தனா உள்ளிட்டோர் பேசினர்.