தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்பப் பெறக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வடசென்னை மாவட்டக் குழு சார்பில் திருவொற்றியூரில் பகுதி தலைவர் சேகுவேரா தலைமையில் சனிக்கிழமை (ஏப். 22) சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் எல்.பி.சரவணதமிழன், தலைவர் ஜி.நித்தியராஜ், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.தமிழ்ச்செல்வி, பகுதிச் செயலாளர் ஆர்.ஸ்டாலின், துணைச் செயலாளர் எஸ்.புவியரசி, துணைத் தலைவர் அச்சுதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.