சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா பவுண்டேசன் பள்ளியில் நடனம் கற்றுகொள்ளும் மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்யக்கோரி மாணவிகள் வியாழக்கிழமை பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதிகளை காலிசெய்யுமாறு மாணவிகளுக்கு நிர்வாகம் மிரட்டல் விடுத்துள்ளது.