மணிப்பூர் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை கண்டித்தும், மணிப்பூர் கலவரத்திற்கு காரணமான மாநில ஒன்றிய பா.ஜ.க அரசுகளை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காஞ்சிபுரத்தில் நகரக்குழு உறுப்பினர் இ.சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார், மாநகரச் செயலாளர் டி.ஸ்ரீதர், ஆர்.மதுசூதனன் நகரக்குழு உறுப்பினர் எம்.சூரியபாரதி ஆகியோர் பேசினார்.