districts

காக்களூரில் வீடுகள் இடிப்புக்கு எதிர்ப்பு

திருவள்ளூர்,மே 24-

    திருவள்ளூர் நகராட்சி மற்றும் காக்களூர் ஊராட்சியை இணைக்கும் இடத்தில் காக்களூர் ஏரி உள்ளது. இந்த காக்க ளூர் ஏரிக்கரையை ஆக்கிர மித்து ஏராளமான வீடு கள், கடைகள் கட்டப் பட்டுள்ளதாக கூறப்படு கிறது.

    இந்த நிலையில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் காக்களூர் சாலை சந்திப்பில் விரிவாக்கப் பணி நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு இடை யூறாக காக்களூர் ஏரிக்கரை யில் கட்டப்பட்ட வீடுகள், கடைகளை அகற்ற முடிவு செய்து வட்டாட்சியர் மதி யழகன் தலைமையில் அகற்றும்பணி தொடங்கி யது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர்.