districts

img

என்எல்சியை பாதுகாக்க வேண்டும்: சிஐடியு

கடலூர் அக்.15- நெய்வேலியிலிருந்து என்எல்சி நிறுவனத்தை வெளியேற்றாமல் பொதுத்துறையாக பாதுகாக்க கோரி சிஐடியு சார்பில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மருத்துவ உதவி தொகை, மருத்துவ காப்பீடு தொகை, இன்கோசர்வ், காண்ட்ராக்டில்  பணி செய்த ஆண்டுகளை முழுமையாக கணக்கிட்டு  அனைவருக்கும் வழங்க வேண்டும். தொழிலாளர் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும். அதிகாரிகளுக்கு இணையாக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு மருத்துவ உதவி மற்றும் காப்பீடு தொகை வழங்க வேண்டும், அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 2020 ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஒரே மாதிரியான ஊதியம் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் டி.ஜெயராமன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்டப் பொருளாளர்  ஜி.குப்புசாமி துவக்கி வைத்தார். பொதுச்செயலாளர் எஸ்.திருஅரசு, பொருளாளர் எம்.சினிவாசன், துணைத் தலைவர் டி.ஆறுமுகம், சிஐடியு மாவட்டத் தலைவர் பி. கருப்பையன், சிபிஎம் நகர செயலாளர் ஆர்.பாலமுருகன், முன்னாள் தலைவர் வி.முத்துவேல், அன்பழகன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.