districts

சொத்து வரி நிலுவை: மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை ,பிப்.3- சென்னை மாநகராட்சி சட்ட விதிகளின்படி, ஒவ்வொரு அரையாண்டு தொடக்கத்தின் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரியை அதன் உரிமை யாளர்கள் செலுத்த வேண்டும். தற்போது மாந கராட்சிக்கு சொத்துவரி ரூ.50 ஆயிரத்துக்குள் நிலுவை வைத்துள்ள சொத்து உரி மையாளர்களின் எண்ணிக்கை சுமார் 5.93 லட்ச மாக உள்ளது.  அந்தவகையில் நிலு வைத்தொகை ரூ.346.63 கோடி உள்ளது. நிலுவைத் தொகையை செலுத்தக் கோரி தபால் துறை மூலமாக சம்பந்தப்பட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. அந்த நோட்டீசில் நிலுவைத் தொகையை சிரமமின்றி, எளிதாக செலுத்த கியூ.ஆர்.கோடு வசதி அச்சிடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி நிலுவை சொத்துவரியை செலுத்தலாம். மேலும், சொத்துவரியை வரி  வசூலிப்பவர், இணைய தளம், மாநகராட்சி மண்டல  அலுவலகங்களில் அமைந் துள்ள இ-சேவை மையங் கள், கைபேசி செயலி மற்றும்  ஆன்-லைன் பணப்பரிவர்த் தனைகள் மூலமாகவும் செலுத்தலாம்.  சொத்துவரி செலுத்த தவறுவோரின் சொத்துகள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, நடப்பு நிதி ஆண்டு  முடிவடைய 2 மாதங்களே உள்ள நிலையில், சொத்து வரி நிலுவை வைத்துள்ள உரிமையாளர்கள் நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.