districts

img

சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஊர்வலம்

பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும், ஆட்டோவிற்கு மாவட்ட எல்லை என்று காரணம் காட்டக்கூடாது, மாவட்டம் தாண்டி செல்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சிதம்பரத்தில் செவ்வாயன்று (ஜன.31)  ஊர்வலம் நடைபெற்றது. இதில் சிதம்பரம் நகர தலைவர் மோகன்தாஸ் தலைமை தாங்கினார். பொருளாளர் ராஜ்குமார், முன்னாள் தலைவர் ரமேஷ்பாபு, சிஐடியு ஆட்டோ சங்க மாவட்ட தலைவரும் நகர்மன்ற துணைத் தலைவருமான முத்துக்குமரன், நிர்வாகிகள்  சங்கமேஸ்வரன், மோகன், புவனகிரி வட்ட செயலாளர் விஜய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.