districts

தனியார் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை அறநிலையத் துறையின்கீழ் கொண்டு வருக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை, ஏப். 6 - சென்னை நகரில் தனியார், தொண்டு நிறுவனங்களின் கட்டுப் பாட்டில் உள்ள கோவில்களை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை நங்கநல்லூரில் பழமை யான தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஏப்.5 அன்று பங்குனி உத்திர விழா கொண்டாடப்பட்டது. இந்த கோவிலுக்கு தெப்பக்குளம் கிடையாது. எனவே, மூவரசம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட 20 அடி ஆழமுள்ள குளத்தில் அன்றைய தினம் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்வின்போது 5 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். இந்த கோவில் அறநிலையத்துறைக்கு சொந்த மானதல்ல. கோவிலை நங்கநல்லூர் ஸ்ரீ சர்வ மங்களாம்பிகை பத்ம சமாஜம் என்ற தொண்டு நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இந்த நிறுவனமே விழாவை நடத்தியது. விழா தொடர்பாக காவல்துறை, தீயணைப்பு துறையிடம் அனுமதி பெற்றதாக தெரியவில்லை. அவசர ஊர்தி போன்ற முன்னேற்பாடுகளையும், செய்யவில்லை. தீர்த்தவாரி நிகழ்வையொட்டி குளத்திலும் எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யப்படவில்லை. மூவரசம்பட்டு குளத்தில் ஆகம விதிகள் கடைபிடிக்கப்படுவதில்லை. இந்த குளத்தில் இறந்தவர்களுக்கு காரியம் செய்வதற்கான காரிய மேடை உள்ளது. அங்கு காரியம் செய்து விட்டு, பிண்டங்களை குளத்தில் கரைப்பது உள்ளிட்ட அனைத்து சம்பிரதாய சடங்குகளும் செய்யப்படுகிறது. இந்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள். இந்த கோவில் அற நிலையத்துறை வசம் இருந்திருந்தால் இதுபோன்ற அசம்பாவிதம் நிகழ்ந்தி ருக்காது என்று அதிகாரிகள் தெரி வித்தனர். எனவே, நடைபெற்ற துயரச் சம்பவத்திற்கு கோவில் நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும். உயிரிழந்த வர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளதை, 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். கோவில் நிர்வாகமும் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். தர்மலிங்கேஸ்வரர் கோவில் உட்பட சென்னை நகரில் ஏராள மான கோவில்கள் தனியார் அல்லது தொண்டு அமைப்புகளின் கட்டுப் பாட்டில் உள்ளது. இதுபோன்ற அசம்பாவிதங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்கவும், பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும் கோவில்கள் அனைத்தையும் இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்த வேண்டும். இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளார்.