districts

சிறையில் விசாரணைக் கைதி தற்கொலை

விழுப்புரம், மே 19- விழுப்புரம் மாவட்ட மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் முருகன் (38). கொலை வழக்கு ஒன்றில் இவரை திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினர் கைது செய்து விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள மாவட்ட சிறையில் கடந்த பிப்ரவரி மாதம் அடைத்திருந்தனர். இந்த நிலையில், சிறையிலுள்ள கழிப்பறையில் முருகன் தூக்கிட்ட நிலையில் கிடந்தார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முருகனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.  இது தொடர்பாக காணை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, நீதித் துறை விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

;