districts

img

ஜிகேஎம் காலனியில் புதிய தொடக்கப்பள்ளி முதல்வர் திறந்துவைத்தார்

சென்னை, செப்.24- சென்னை கொளத்தூர் தொகுதிகுட்பட்ட ஜிகேஎம் காலனி யில் நடைபெற்று வரும் சமுதாய நலக்கூட கட்டுமான பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  கட்டுமான பணியின் நிலை குறித்து பொறி யாளரிடம் அவர் கேட்டறிந்தார். கொளத்தூர் ஜிகேஎம் காலனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்கப்பள்ளியை முதலமைச்சர் திறந்து  வைத்தார். கொளத்தூர் பகுதியில் புதிதாக கட்டப்படும் வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு முதல மைச்சர் அடிக்கல் நாட்டினார். மதுரை சாமி மடத்தில் உடற்பயிற்சி கூடத்தையும் அவர் திறந்து வைத்தார்.