அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமம் சார்பில் ஆரம்ப கண் பராமரிப்பு சிகிச்சை மையம் செங்கல்பட்டில் திங்களன்று (நவ.14) தொடங்கப்பட்டது. இம்மையத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் திறந்து வைத்தார். இதில் மருத்துவமனையின் பிராந்திய மருத்துவ இயக்குநர் ஸ்ரீனிவாசராவ் இலவச சிகிச்சை திட்டத்தை துவக்கி வைத்தார்.