districts

img

எல்ஐசி ஊழியர் சங்கத் தலைவர் ஜி.ஜெயராமனுக்கு பாராட்டு விழா

சென்னை, ஏப். 1 - எல்ஐசி ஊழியர் சங்கத் தலைவர் ஜி.ஜெய ராமனுக்கு சனிக்கிழமையன்று (ஏப்.1) பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது. காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சென்னை கோட்டம் -1ன் தலைவர் ஜி.ஜெயராமன் 1981ம் ஆண்டு எல்ஐசியில் பணிக்கு சேர்ந்தார். 1982ம் ஆண்டு முதல்  சங்க நிர்வாகியாக செயல்பட்டு வந்தார்.  கிளை செயலாளர், கோட்ட இணை  செயலாளர், தலைவர் என பொறுப்பு களை வகித்து சங்கத்தை திறம்பட வழிநடத்தியவர். 41 ஆண்டு காலம் பணியாற்றி வெள்ளியன்று (மார்ச் 31) ஓய்வு பெற்றார். இதனையொட்டி சங்கத்தின் சார்பில், தேவநேயப் பாவாணர் நூலக வளா கத்தில் பணி நிறைவு பாராட்டு நிகழ்வு நடைபெற்றது. சென்னை கோட்டம் - 1ன் பொதுச் செயலாளர் எஸ்.ரமேஷ் குமார் தலைமை தாங்கினார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா, தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.செந்தில்குமார், முன்னாள் பொதுச் செயலாளர் கே.சுவாமிநாதன், சென்னை பகுதி-2 பொதுச் செயலாளர் எஸ்.சர்வ மங்களா, சென்னை பகுதி 1ன் இணை செயலா ளர்கள் கே.விஜயலட்சுமி, டி.ரமேஷ், சிஐடியு மூத்த தலைவர் எஸ்.அப்பனு, களப்பணியாளர் சங்க பொதுச்செயலாளர் ஆர்.மணி, லிகாய் சென்னை கோட்டம்-1ன்  பொதுச்செயலாளர் கே.தாமோதரன், பொதுக்காப்பீட்டு ஊழியர் சங்க நிர்வாகி நாகராஜ், முகவர்கள் சங்க பொருளாளர் கதிர்வேல் உள்ளிட்டோர் ஜெயராமனின் பணியை பாராட்டி பேசினர்.