திருவண்ணாமலை,ஏப்.27- இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரு மான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது, பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தில்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம், மாவட்டச் செயலாளர் எம். பிரபலநாதன், சிஐடியு நிர்வாகிகள் பாரி, பாலசுந்தரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் எஸ்.பலராமன், உதயகுமார், லட்சுமணன், அண்ணாமலை, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சி.எம்.பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.