districts

புறநகரில் ஆக்சிஜனுடன் 400 படுக்கைகள் தயார்

தாம்பரம், ஜூன் 17-  தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து  வருகிறது. சென்னையில் இத்தொற்றை கட்டுப்படுத்த தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள  காச நோய் மருத்துவ மனையில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய  100 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதனை மக்கள் நல்வாழ்வுத் துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார், செங்கல்பட்டு  மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், எம்எல் ஏக்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லா வரம் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண் ணன், துணை மேயர் கோ.காமராஜ், மண்டல  தலைவர் எஸ்.இந்திரன், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், செயற்பொறி யாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன்  ஊடகவியலாளரிடம்  கூறுகையில், ‘‘தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, அரியானா போன்ற மாநிலங்களில் கொரோனா  தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா தொற்று  பரவல் அதிகரித்து வரும் மாவட்டங்க ளில் நேரடியாக சென்று ஆய்வு செய்து  வருகிறோம். வியாழன்று தாம்பரத்தில் உள்ள காசநோய் மருத்துமனையில் கொரோனா சிகிச்சை அளிக்க கூடிய 100  படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.

இதேபோல் அருகில் உள்ள சித்த மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகள் தயாராக உள்ளன. செங்கல்பட்டு அரசு  மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகள்  தயார் நிலையில் உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை 95 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 60 வயதுக்கு  மேல் உள்ளவர்கள், இணை நோய்  உள்ளவர்கள் என 11 பேர் மருத்துவமனைக ளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும்,  கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அவர்களையும், அவர்களைச் சார்ந்தவர் களையும் தீவிரமாக கண்காணிக்கப்படு கின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா  பரவி வந்தாலும், அதன் பாதிப்பு குறைவாகவே உள்ளது. இதுபோல் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் 40 விழுக்காடு நிரம்பினால் மட்டுமே புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். தற்போது அந்த நிலை இல்லாததனால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இல்லை,’’ என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.