பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாமை கடலூர் மஞ்சக்குப்பத்தில் மேயர் சுந்தரிராஜா புதனன்று துவக்கிவைத்தார். மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் தலைமையில் துணை மேயர் தாமரைச்செல்வன், நகர் நல அலுவலர் எழில் மதனா பங்கேற்றனர். இதையடுத்து புதுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் கவிதா தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.