மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குன்றத்தூர் வட்டக் குழு சார்பில் விடுதலைப் போராட்ட வீரர், தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி நிகழ்ச்சி படப்பையில் ஞாயிறன்று (பிப். 4) வட்டச் செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்றது. என்.சங்கரய்யாவின் உருவப்படத்தை கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் பி.சுந்தரராஜன் திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினர். மாவட்டச் செயலாளர் சி.சங்கர், செயற்குழு உறுப்பினர் பி.ரமேஷ் ஆகியோரும் பேசினர். நிகழ்ச்சியில் குன்றத்தூர் வடக்குழு சார்பில் தேர்தல் நிதி 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை பி.சுந்தரராஜனிடம் வழங்கினர்.