புதுச்சேரி,பிப்.27- சிறிய நகராட்சிக்குள்ள அதிகாரங்கள் கூட புதுச்சேரி சட்டப்பேரவைக்கு இல்லை எனறு ஜி.ராமகிருஷ்ணன் குற்றஞ்சாட்டி னார் . புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ‘மாநில அந்தஸ்து’ வழங்க வலியுறுத்தி சிறப்பு கருத்தரங்கம் நடை பெற்றது. சிபிஐ மாநிலச் செய லாளர் சலீம் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசுகையில்,“ பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தி லிருந்த புதுச்சேரி பிரதேசம் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் வ.சுப்பையா தலைமையில் நடைபெற்ற மகத்தான போராட்டத்தின் மூலம் 1954 ஆம் ஆண்டு விடுதலை பெற்றது”என்றார். ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் மூல மாகவும், எண்ணற்ற விடுதலை போராட்ட வீரர்களின் தியாகத்தாலும் விடுதலை அடைந்து இன்றைக்கும் புதுச்சேரி மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதி நிதிகளுக்கு அதிகாரங்கள் மறுக்கப்படு கிறது. மூன்று அதிகார மையங்க ளாக உள்ள புதுச்சேரியில் எந்த மக்கள் நலத்திட்டங்களும் நிறைவேற்றப்பட வில்லை என்றும் அவர் கடுமையாக சாடினார். சின்னஞ்சிறிய நகராட்சிக்கு இருக்கும் அதிகாரங்கள் கூட புதுச்சேரி சட்டப்பேரவைக்கு இல்லை. யூனியன் பிரதேசமாக இருந்த அருணாச்சல பிரதேசம்,மேகாலயா,கோவாவிற்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அதேப்போல் 7லட்சம் மக்கள் தொகை கொண்ட சிக்கிம் மாநில அந்தஸ்து பெற்றுள்ளது.
15 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து ஏன் வழங்கபடவில்லை. எனவே தான் ஒன்றிய ஆட்சியாளர்கள் புதுச்சேரியை தங்கள் கட்டுபாட்டில் வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது விடுதலை போராட்ட தியாகிகளின் லட்சியத்தை சீர்குலைக்கும் வேலை என்றும் ஜி.ராம கிருஷ்ணன் தெரிவித்தார். டி.ராஜா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா பேசுகையில், “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் ஏன்? அது கொடுக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார். முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் து.ரவிக்குமார் எம்.பி, புதுச்சேரி எதிர்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். நாடு முழுவதும் ஆளுநர் பதவிகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.