கிருஷ்ணகிரி,ஆக.28- தேன்கனிக்கோட்டை வட்டத்தில் தளி சாலை, அதிலிருந்து பிரியும் கிறிஸ்து பாளையம் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக உள்ளது. இந்த தார் சாலையின் இரு புறமும் மண் சாலைகள் கரைந்து ஒரு அடி ஆழத்துக்கு பள்ளம் விழுந்துள்ளது. சில இடங்களில் சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து கரடு முரடாகவும் உள்ளது. இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் விபத்தில் சிக்கி வருகின்றனர்.