districts

img

ஆட்டோ ஓட்டுநர்களின் காத்திருப்பு போராட்டம் ஒத்தி வைப்பு

சென்னை, மே 25 -

    மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வலி யுறுத்தி வெள்ளியன்று (மே 26) போக்கு வரத்து ஆணையர் அலுவலகத்தில் நடை பெற இருந்த காத்திருப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் ஓலா உபேர், ரேபிடோ போன்றவற்றை தடை செய்ய வேண்டும்,

    ஆட்டோக்களுக்கான செயலியை அரசே உருவாக்க வேண்டும், ஆன்லைன் அபராத முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்களை வலியுறுத்தி சிஐடியு ஆட்டோ சங்கங்கள் சார்பில் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.

   இந்நிலையில் போக்குவரத்து ஆணை யர் நிர்மல்ராஜ், காவல்துறை உதவி ஆணையர் பாஸ்கர், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன செயல்தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம், சென்னை மாவட்ட நிர்வாகிகள் அனீபா,  கபாலி,  மனோகர் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

   அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய  எஸ்.பாலசுப்பிரமணியம், “முதல மைச்சர் வெளிநாடு சென்று இருப்ப தால்,  20 நாட்கள் கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, போராட்டத்தை ஒத்திவைக்க ஆணையர் கோரினார். அதனையேற்று போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது” என்றார்.