இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பெரம்பூர் பகுதி கண்ணதாசன் நகர் கிளை சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் காவல்துறை அதிகாரிகள் தமிழ்வாணன், டி.சரவணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ராஜ்குமார், வாலிபர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் அபிராமி, மாவட்ட விளையாட்டு கழக பொறுப்பாளர் சுரேந்தர் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். பகுதிச் செயலாளர் கார்த்தி, கிளை நிர்வாகிகள் பரத், ஜெய்கணேஷ், சரவணன், சுபாஷ் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.