திருவண்ணாமலை மாவட்டம், குருவிமலை அரசு நடுநிலைப் பள்ளியில் ஊராட்சி மன்றத் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. துணைத் தலைவர் கலைச்செல்வி, தலைமை ஆசிரியர் ஆஞ்சலா, ஆசிரியர்கள் பிரிசில்லா, சீமான், குமாரத்தி, மீரா, மலர்விழி, தெரேசா, பிரீத்தி, பிரேமா, ஆசிரியர் டேவிட் ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், கிள்ளை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கலைஞர் நகர் இருளர் பழங்குடியினர் பள்ளி சார்பில் சமத்துவ பொங்கல் விழா பேரூராட்சித் தலைவர் கிள்ளை ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் உதவி ஆட்சியர் சுவேதா சுமன், மன்ற துணைத் தலைவர் மல்லிகா முத்துக்குமார், உறுப்பினர் குமார், செயல் அலுவலர் செல்வி, காவல் உதவி ஆய்வாளர்கள் லட்சுமி ராமன், ராம்குமார், தலைமை ஆசிரியர் உமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நடைபெற்ற கலை நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.