சென்னை, ஏப். 11- சென்னையில் பணிபுரி யும் காவல் துறையினர் வியாழன்ன்று (ஏப்.11) தங்களது தபால் வாக்கு களை ஆர்வமுடன் பதிவு செய்தனர். தமிழ்நாட்டில் மக்கள வைத் தேர்தலையொட்டி பாதுகாப்பு பணியில் 1 லட்சத்து 90 ஆயிரம் காவல் துறையினர் ஈடுபடுத்தப்படு கிறார்கள். சென்னையில் 19 ஆயிரம் காவல்துறையினர் தேர்தல் நாளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் நாளன்று காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள தால் அவர்கள் நேரடியாக வாக்குப்பதிவு மையங் களுக்கு சென்று வாக்கு செலுத்த இயலாது என்ப தால் ஒவ்வொரு தேர்தலின் போதும் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப் படுகிறது. அந்த வகையில் சென்னையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் 19 ஆயிரம் காவல் துறையினரும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 3 நாட்கள் தபால் வாக்கு களை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை பேசின்பாலம் சாலை மூல கொத்தளம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி யின் வட சென்னை வட்டார துணை ஆணையர் அலுவல கத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தபால் வாக்குச்சாவடி மையத்தில் வடசென்னை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், பெரம்பலூர் ஆகிய மக்களவை தொகுதி களை சேர்ந்தவர்கள் தபால் வாக்குகளை செலுத்தலாம். அடையார், முத்து லட்சுமி சாலையில் உள்ள தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத் தில், தென் சென்னை, மயிலாடுதுறை, நாகப்பட்டி னம், தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளை சேர்ந்தவர்கள் தபால் வாக்குகளை செலுத்த லாம் என தெரிவிக்கப் பட்டிருந்தது. இதையடுத்து வியாழக் கிழமை (ஏப். 11) முதல் நாளே ஏராளமான காவல்துறையி னர் 3 மையங்களிலும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.