districts

img

திருவள்ளுவர் பல்கலைக்கழக ஊழல் புத்தகம் வெளியிட காவல்துறை தடை

வேலூர், ஜன.4-  திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.300 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக விவரிக்கும் புத்த கத்தை வெளியிட காவல் துறையினர் அனு மதி மறுத்துவிட்டனர்.  இதனால் தொழிற்சங்கத்தினர் பல்கலை நுழைவு வாயில் முன்பு புத்தகத்தை வெளியிட்டு, அதை செய்தியாளர்களிடம் வழங்கினர். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் செயல்பட்டுவரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள 70-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.300 கோடி மதிப்பில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக திரு வள்ளுவர் பல்கலை. தொழிலாளர் சங்கத்தி னர் ‘திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் தில்லு முல்லு’ என்ற பெயரில் புத்தகம் தயாரித்துள்ளனர். சுமார் 417பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் முன்பாக வெளியிட உள்ள தாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலை யில்,சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் பல்கலை. முன் புதனன்று  திரண்டனர். அங்கு வந்த காவலர்களுக்கும், சங்க நிர்வாகி களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், நுழைவுவாயில் முன்பு புத்தகத்தை வெளியிட்டு, செய்தியாளர்க ளிடம் வழங்கினர். மேலும், நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்று, புத்தகம் வெளி யிடப்படும் என்று சங்கத்தின் கவுரவத் தலை வர் பேராசிரியர் ஐ.இளங்கோவன் தெரி வித்தார். இந்நிலையில் பல்கலை. பதிவாளர் செந்தில்வேல்முருகன் கூறும்போது, ‘‘அவர்கள் கூறிய ஊழல்கள் குறித்த விவ ரங்கள் எங்களுக்கு வரவில்லை. 10 ஆண்டு களுக்கு முன் ஊழல் நடந்ததாகக் கூறு கிறார்கள். அந்த விவகாரமும் நீதி மன்றத்தில் உள்ளது. அவர்கள் கூறும் பரிந்து ரைகளை நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம். சில தகவல்கள் தனிப் பட்டமுறையில் இருப்பதாகத் தெரிகிறது’’ என்றார்.  இதில் பேராசிரியர்கள் ரகுநாதன், அனந்த நாராயணன், எஸ்.குமார், தே.சசிகலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.