districts

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் இருவர் பலி

திருவள்ளூர், மே 15-

     திருவள்ளூர் மாவட்டம், காவாங்கரை யில் கழிவுநீர் தொட்டியை சுத்தம்செய்ய முயன்ற போது விஷவாயு தாக்கி இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மொண்டியம்மன் நகரைச் சேர்ந்த பாஸ்கர் (40) அதே பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் (45) ஆகிய இருவரும் நண்பர்கள்.  கூலி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வந்த இவர்கள், புழல் அடுத்த காவாங்கரை பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் மூலம் திங்களன்று (மே 15)   நிர்மலா என்பவரின் வீட்டின் கழிவு நீர் தொட்டியை தூய்மைப்படுத்தும் பணிக்கு சென்றனர்.

    குறுகலான இடத்தில் உள்ள அந்த கழிவு நீர் தொட்டியில் பாஸ்கர், இஸ்மாயில் இருவரும் இறங்கிய போது, விஷ வாய்வு தாக்கி  தொட்டிக்குள்ளேயே மயங்கினர். தொட்டிக்குள் இறங்கியவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வெளியில் வராததால் சந்தேகம் அடைந்து அருகில் இருந்த வர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் குரல் கொடுத்தும் எந்தவித அசைவும் இல்லாததால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள்  கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி  இருவரையும் சடலமாக மீட்டனர். பின்னர் உடல்களை பிரேத பரி சோதனைக்காக  சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விஷ வாயுத் தாக்கி உயிரிழந்த கூலி தொழி லாளி இஸ்மாயிலுக்கு லத்தீபா என்ற மனைவி யும், 9 வயதில் பெண் குழந்தையும் 4 வயதில் ஆண் குழந்தையும், இதேபோல் உயிரிழந்த மற்றொரு தொழிலாளியான பாஸ்கருக்கு வசந்தி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.  

 தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆறுதல்

     தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வட சென்னை மாவட்டத்தலைவர் ராஜ்குமார், பொருளாளர் வழக்கறிஞர் வி.ஆனந்தன் ஆகியோர் இறந்தவர்களின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறினர்.

    இந்த கோரச் சம்பவம் அவர்களது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. அண்மையில் மீஞ்சூரில் 2 தொழி லாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த நிலையில் மீண்டும் புழல் பகுதியில் ஏற்பட்டுள்ள இச்சம்பவம் மிகபெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.