திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கூவம் கிராமத்தில் புதனன்று (டிச.21) சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் நரவை பருவ நெல் நடவு பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் விவசாய கூலி தொழிலாளர்களோடு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூலித் தொழிலாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களோடு நெல் நாற்றுகள் நடவு பணியைமேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எபினேசன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மண்டல மேலாளர் சேகர், துணை மண்டல மேலாளர் முனுசாமி, துணை இயக்குநர் ராஜேஸ்வரி உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.