districts

img

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மறியல்

விழுப்புரம், மே 3- கண்டமங்கலம் அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம், கண்ட மங்கலம் ஒன்றியம், பள்ளித்தென்னல் ஊராட்சி, பூஞ்சோலைகுப்பம் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை நட வடிக்கை எடுக்கவில்லை.  இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் புதனன்று (மே 3)  சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கண்டமங்கலம் காவல் துறையினர் மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, முறையாக குடிநீர் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.