மக்கள் விரோத,ஜனநாயக விரோத, விவசாயிகள் விரோத, தொழிலாளர்கள் விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடை பெற்றது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சேத்துப்பட்டு, திரு வண்ணாமலை நகரம், பெரண மல்லூர், செங்கம், போளூர், கீழ்கொடுங்காலூர், ஆதமங்கலம், செய்யாறு, ஆரணி உட்பட 9 மையங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி நகரம், சங்கரா புரம் வட்டம் கொசப்பாடி, தியாக துருகத்தில் வட தொரசாலூர், திருக் கோலூர் பேருந்து நிலையம், உளுந்தூர்பேட்டை வட்டம் களமருதூர் மற்றும் பிள்ளையார் குப்பத்தில் ஊர்வலம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி , நெய்வேலி, விருத்தா சலம், வடலூர், மற்றும் சிதம்பரம் ஆகிய 6 இடங்களில் வேலை நிறுத்த மறியல் போராட்டம் நடை பெற்றது. 620 பேர் கைது செய்யப் பட்டனர். விழுப்புரம் தலைமை தபால் நிலையம், நான்கு முனை சந்திப்பு ஆகிய இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. வேலூர் தலைமை தபால் நிலை யம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 104 பெண்கள் உட்பட 290 பேர் கைது செய்யப் பட்டனர். குடியாத்தம் பேருந்து நிலையம் முன்பு நடந்த மறியலில் 18 பெண்கள் உட்பட 110 பேரை காவல்துறையினர் கைது செய்த னர். திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற மறி யல் போராட்டத்தில் 20 பெண்கள் உட்பட 150 பேர் கைது செய்யப்பட்டனர். ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி யில் நடை பெற்ற மறியலில் 100க்கும் மேற் மேற்பட்டோர் செய்யப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் முத்துக்கடை, மாம்பாக்கம் கூட்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மறியல் நடைபெற்றது. ரயில்வே உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை எதிர்த்தும் புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும், தொழி லாளர்கள், விவசாயிகள் போராட்டத் திற்கு ஆதரவு தெரிவித்தும் திருப் பத்தூரில் டிஆர்இயு சார்பில் கிளைச் செயலாளர் ரவி தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்ட இணைச் செயலாளர் முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழிற்சங்கங்கள், எஸ்கேஎம் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கிருஷ்ணகிரியில் நடந்த மறியலில் 800க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். சூளகிரி, ஊத்தங் கரை உள்ளிட்ட பகுதிகளில் மறியல் போராட்டம் நடைபெற்றது. வட மாவட்டங்களில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் அனைத்து அமைப்புகளின் மாநில, மாவட்ட, வட்டார, ஒன்றிய தலைவர்கள், நிர்வாகிகள் கோரிக்கைகளை வலி யுறுத்தி உரையாற்றினர்.