தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து அரசு துறைகள் ஒருங்கிணைந்து ‘எல்லோருக்கும் எல்லாம்’ புகைப்படக் கண்காட்சி மற்றும் துறை சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டிருந்த தை மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் கடலூர் மஞ்சக்குப்பத்தில் திறந்து வைத்தார். இந்த கண்காட்சி மார்ச் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.ராஜாராம், மாநகராட்சி துணை மேயர் பா.தாமரைச்செல்வன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.