districts

சாதி மறுப்பு திருமணம்: தம்பதிக்கு பாதுகாப்பு கேட்டு காவல்துறையிடம் மனு

திருவண்ணாமலை, ஜன.18- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளார் அருகே அருங்குணம் கிராமத்தை சார்ந்த பழங்குடி சமூகத்தைச் சார்ந்த சிவா (24) , சென்னை அயப்பாக்கம் பட்டியலினத்தை சேர்ந்த வானதி (19) இருவரும் காதலித்து வந்தனர். வானதியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, வீட்டை விட்டு, வேளியேறிய வானதி சிவாவை திருமணம் செய்துகொண்டனர்.  இந்நிலையில்,வானதியின் பெற்றோர்  உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அச்சுறுத்தி வருகின்றனர்.  இதனால், தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு வந்தவாசி காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனார்.  அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ப.செல்வன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் இரா.சரவணன்,  சிபிஎம் வந்தவாசி வட்டச் செயலாளர் அப்துல் காதர், மாவட்ட குழு உறுப்பினர் சுகுணா, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் மாரிமுத்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டப் பொருளாளர் சிவக்குமார்,  நிர்வாகிகள் அண்ணாமலை,  ஆனந்தன், வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் சுகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.