ராணிப்பேட்டை மாவட்டத்தில் பவர்கிரீட் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உயர்ந்தபட்ச இழப்பீடு வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பி.டில்லிபாபு தலைமையில், மாவட்டச் செயலாளர் எல்.சி.மணி, தலைவர் எஸ்.கிட்டு, பொருளாரர் சி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் செவ்வாயன்று (செப். 27) தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்தித்து மனு அளித்து பேசினர்.