100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி வழங்கக் கோரியும், அனைத்து குடும்பங்களுக்கும் கொரோனா நிவாரண நிதி 7,500 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் விழுப்புரம் மாவட்டம் கூட்டடேரிப் பட்டில் உள்ள மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் வி.அர்ச்சுணன் தலைமையில் மனு அளித்தனர், இதில் ஒன்றியச் செய லாளர் எஸ்.அபிமன்ணன், தலைவர் எம்.மணி, குமார், கே.காளிதாஸ், ஆர்.சிவகாமி, எஸ்.சரிதா உட்பட பலர் கலந்து கொண்டனர். கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் வாஞ்சிநாதன் தலைமையில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செல்லையா, சுப்பிரமணியம், சிஐடியு மூத்த உறுப்பினர் ராஜமாணிக்கம் ஆகியோர் மனு அளித்தனர்.